ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் அனைத்து மாவட்டங்களில் நிதி சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கு சுற்றறிக்கை - பணப்பரிவர்த்தனை குறித்தவற்றிற்கு மட்டும் திருத்தங்கள்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , சென்னை - 600006 . மாநில திட்ட இயக்ககம் - நாள் 17.03.2022 .
பொருள் : ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் அனைத்து மாவட்டங்களில் நிதி சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கு சுற்றறிக்கை - பணப்பரிவர்த்தனை குறித்தவற்றிற்கு மட்டும் திருத்தங்கள் - சார்பு .
பார்வை : இவ்வலுவலக ந.க.எண் .1988 / நிதிப்பிரிவு / ஒபக / 2021-1 மற்றும் 2 , நாள் 27.08.2021 மற்றும் 28.08.2021 . பார்வையில் உள்ள கடிதங்களின் மீது தங்களின் கவனத்தை ஈர்க்க விழைகிறேன் .
2) 08.03.2022 அன்று நடைபெற்ற அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் , பள்ளிகளில் ஏற்படும் அவசர சில்லரைச் செலவினத்தினை மேற்கொள்ள தனக்காக ( self ) என்று தற்போது உள்ள ரூ .4,000 / -த்தினை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது .
3) அக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து , ஒவ்வொரு ஆண்டும் கவனம் மற்றும் பாதுகாப்பு தலைப்பின் கீழ் ( under safety and security grant ) மற்றும் கூட்டு மானியம் என்ற தலைப்பின் கீழ் ( under composite grant ) , அதாவது மேலே தெரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பின் கீழ் , பள்ளிக்கூடத்திற்கு விடுவிக்கப்படும் தொகையில் , தனக்காக ( self ) என்று 1/5 ( ஐந்தில் ஒரு பங்கிற்கு மிகாமல் ) , அவசர சில்லரைச் செலவினம் மேற்கொள்ளும் பொருட்டு , மறு உத்திரவு வரும் வரையிலான காலத்திற்கு பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது . அதற்காக ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் நடைமுறையை கடைபிடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது .
இந்த உத்தரவு இக்கடிதம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து அமலுக்கு வருகிறது .
ப . ராதாகிருஷ்ணன் மாநில திட்ட இயக்குநருக்காக அனுப்புநர் திரு இரா . சுதன் , இ.ஆ.ப. , மாநில திட்ட இயக்குநர் , ஓருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் , சென்னை 600006 . அய்யா / அம்மா ,
Post a Comment