செப்டம்பர் -17 (தந்தை பெரியார் பிறந்த தினம் ) ஆண்டுதோறும் " சமூகநீதி நாள் " ஆக அனுசரித்து அரசாணை வெளியீடு !
உறுதிமொழி - தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் -17 ஆம் நாளை ஆண்டுதோறும் " சமூகநீதி நாள் " ஆக அனுசரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 17.09.2021 அன்று உறுதிமொழி அனுசரித்தல் தொடர்பாக .
சட்டமன்ற விதி எண் .110 :
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் , தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசமி அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17 - ஆம் நாளை ஆண்டுதோறும் " சமூக நீதி நாள் ” ஆகக் கொண்டாடுவது என முடிவு செய்து சட்டமன்ற விதி எண் .110 - ன்கீழ் அறிவிப்பு செய்ததனை பார்வையில் காணும் அரசாணை இன்று அரசால் வெளியிடப்பட்டுள்ளது .
ஈ.வெ.ராமசமி பிறந்த நாள் - சமூக நீதி நாள் :
அதில் , “ சாதிய ஏற்றத் தாழ்வுகள் , தீண்டாமைக் கொடுமைகளை , மத வேறுபாடுகளை உதறித் தள்ளி , பெண்களைச் சமநிலையில் மதிக்கும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17 - ஆம் நாள் அன்று ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி , அனைத்து அரசு அலுவலகங்களிலும் " சமூக நீதி நாள் ” உறுதி மொழியை எடுத்துக் கொள்ளும் விதமாக கீழ்க்கண்டவாறு உறுதி மொழியினை அனுசரிக்க முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே , பார்வை 1 - ல் தெரிவித்துள்ளவாறு வரும் 17.09.2021 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு " சமூக நீதி நாள் ” உறுதிமொழியினை , சமூக இடைவெளி பின்பற்றி , முககவசம் அணிந்து உரிய பாதுகாப்புடன் எடுக்குமாறும் , உறுதிமொழி நிறைவுற்ற பின்னர் , இது தொடர்பான அறிக்கையினை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . இணைப்பு : உறுதிமொழி .
Post a Comment