முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை.
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக பள்ளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்பின் ஆன்லைன் மூலம் 10 மாதங்களாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.
அதன்பின் கொரோனாவின் இரண்டாம் அறை தாக்கம் அதிகமாக பரவி வந்த நிலையில் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது மேலும் எவ்வித தேர்வுகள் இன்று அவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டன.இந்த சூழலில் பள்ளிகளில் சில மாற்றங்களை செய்ய தொடக்கப்பள்ளி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், “அனைத்து ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளிலும் கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளதா” என அரசின் ‘சாகன்’ தளத்தில் மாதந்தோறும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
Although read this news also:
Although read this news also:
இதன் மூலமாக தொடக்கப்பள்ளி இயக்குநகரத்திற்கு கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்வது குறித்த விவரங்களை ‘சாகன்’ தளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இது குறித்த வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இந்த செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுகிறதா என உறுதி செய்யப்பட வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment