Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

ஏப்ரல் 6-ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு‌ - வதந்தி.



தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் வதந்தி என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து சென்னையில் அவர் நேற்று கூறியதாவது:


 தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தற்போது தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கை கழுவுதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம். 
 
 ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால்,  அந்த தெரு நோய் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படும். அந்த தெருவில் இருந்து, வெளிநபர்கள் உள்ளே வருவதும், உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்வதும் தடுக்கப்படும். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் பரப்பப்படுகிறது.
 



Although read this news also:



 இது வதந்தி, பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால், நோய் தொற்றை கட்டுப்படுத்தலாம். கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post