அடிப்படை வசதிகள் வேண்டும் என ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
தேர்தல் பணி மிகவும் முக்கியமான, தவிர்க்க கூடாத பணி. எனினும் கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய், இதய நோய், சிறுநீரக கோளாறு போன்ற நோய் பாதிப்பு உள்ளோருக்கு, மனிதாபிமான அடிப்படையில் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
Although read this news also:
ஒவ்வொரு தேர்தலிலும், அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற, 100 சதவீதம் தபால் ஓட்டுகளை வழங்க வேண்டும். ஞாயிறு தவிர்த்து பிற நாட்களில், தேர்தல் வகுப்புகளை நடத்த வேண்டும்.
பெண் ஆசிரியர்களை, அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகே உள்ள ஓட்டு சாவடிகளில் பணியமர்த்த வேண்டும். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, உணவு மற்றும் இதர அடிப்படை வசதிகள் உள்ளதாக என உறுதிப்படுத்த வேண்டும் இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment