பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் பணிபுரிகின்றனர்-அண்ணா பல்கலைக்கழகம்
இதில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, ஆசிரியர்கள் பட்டம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து உண்மைத்தன்மை சான்றிதழ்களை பெற்று, அதையும் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்குமாறு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில்,சுமார் 6 ஆயிரம் ஆசிரியர்களின் பிஎச்டி சான்றிதழ்கள் மட்டுமே உண்மைத் தன்மை சான்றிதழுடன் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் இன்னும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலியான பட்டம் மூலம் பணியில் சேர்ந்துள்ளனர் என சந்தேகம் எழுந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் சிலர் கூறியதாவது:
உண்மை தன்மை சான்றிதழ் அளிக்காததாலே அவர்கள் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்து விட்டனர் என்று ஆகிவிடாது. கொரோனா பரவலுக்கு இடையே பல்கலைக்கழகங்களிடம் உண்மை தன்மை சான்றிதழ் பெரும்பொழுது, ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1,000-க்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டியது உள்ளது.
Although read this news also:
பெரும்பாலான ஆசிரியர்கள் அண்ணா பல்கலையில் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். அதன் உண்மை தன்மையை அண்ணா பல்கலையே ஆராயலாம். ஆனால், அதற்கும் கல்லூரிகள் கட்டணம் கட்ட நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றன. இதனால் தான் பல கல்லூரிகள் தங்கள் ஆசிரியர்களின் பிஎச்டி பட்டத்துக்கான உண்மைத் தன்மை சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, ஆசிரியர்களின் பிஎச்டி பட்டத்துக்கான உண்மைத்தன்மை சான்றிதழை ஏப்ரல் 30-க்குள் சமர்ப்பிக்குமாறு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளன.
Post a Comment