Title of the document
நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு- சந்திரசேகர ராவ்!!
தெலுங்கானா சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் அரசு ஊழியர்களுக்கான ஊதிய திருத்த ஆணையம் குறித்தவிவாதத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று பேசியதாவது: தெலுங்கானாவில் 5 ஆண்டுக்கு ஒருமுறை அரசு ஊழியர் ஊதியதிருத்த ஆணையத்தின் பரிந்துரைப்படி புதிய ஊதியம் அமல்படுத்தப்படுகிறது. வரும் நிதியாண்டில் ஏப்ரல் முதல் தெலுங்கானாவில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 30 சதவீத ஊதிய உயர்வு அமல்படுத்தப்படும். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட 9,17,797 பேர் பயனடைவார்கள். மேலும் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது 58 -ல் இருந்து 61 ஆக உயர்த்தப்படுகிறது.
Although read this news also:
Post a Comment