RTI- க்கு தனியார் பள்ளிகளில் 86,326 பேர் விண்ணப்பம்.
கடந்த 2009-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள், விளிம்புநிலை நலிவடைந்த பிரிவினருக்கும் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதற்கு ஆகும் செலவை (பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக்கட்டணம்) சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு அரசு வழங்கிவிடும்.
தமிழகத்தில் 2011-இல் தொடங்கி கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது. எனினும் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டை பெரும்பாலான தனியார் பள்ளிகள் முழுமையாக கடைபிடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அரசே குழந்தைகளை தேர்வு செய்து தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகிறது.
இதற்காக 2017-இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தியுள்ளது இதன்படி, நடப்பு கல்வியாண்டில் (2020-2021) மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு இணையவழியில் விண்ணப்ப பதிவு, கடந்த ஆகஸ்ட் 27, முதல் செப்டம்பர் 25 வரை நடைபெற்றது.
, மாநிலம் முழுவதும் 86, 326 பேர் விண்ணப்பித்துள்ளனர், இவர்கள் சான்றிதழின் உண்மை தன்மையை சரி பார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் முன்னிலையில் குலுக்கல் நடைபெறும்.
இதன் மூலம் இடங்கள் ஒதுக்கப்படும், ஆகஸ்ட் 3 முதல் 7-ஆம் தேதி வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. குழுக்களின் போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், குழுக்கள் நேர்மையாகவும்மக்கள் நேர்மையான முறையில் நடைபெறுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் மெட்ரிக் பள்ளிகளில் இயக்குனர்கள் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் சேரகடந்த ஆண்டைவிட குறைவாக விண்ணப்பித்து உள்ளதால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment