New Education Policy 2020 தமிழகத்தில் இன்று கருத்துக் கேட்பு
தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை (New Education Policy 2020) அமல்படுத்த கடும் எதிர்ப்புகள் நிலவிவருகின்றன .. இதனால்
- மாணவர்கள்,
- பெற்றோர்,
- பேராசிரியர்கள் மற்றும்
- நிபுணர் குழு
ஆகியோர்களிடம் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு இன்று செப்டம்பர் 24 (24.09.2020) கருத்து கேட்கிறது.
மத்திய அரசின் சார்பில், புதிய தேசிய கல்வி கொள்கை (New Education Policy 2020) தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், இதை அமல்படுத்துவது குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்களிடம், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க, உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில், தனித்தனியே நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று நமது கல்வி நியூஸ் வலைதளத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
உயர் கல்வி நிபுணர் குழுவினர், தமிழகத்தில் உள்ள பல்கலை துணை வேந்தர்களிடம், நேற்று முன்தினம் கருத்துக்கள் கேட்டனர். உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில், 'ஆன்லைன்' வழியில், இந்த கூட்டம் நடந்தது. இதையடுத்து, இன்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு கருத்து கேட்கிறது. இன்று காலை, 9:30 மணி முதல், மூன்று குழுவாக, 'ஆன்லைன்' வழியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும் கல்வி சம்பந்தமான பள்ளிக்கல்விதுறையின் உடனடி தகவல்களுக்கு நமது கல்விநியூஸ்.in வலைதளத்துடன் இணைந்திருங்கள்
Post a Comment