Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 

 மதுரையில் பல்வேறு பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி

 

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரம் வெயில் கடுமையாக இருக்கிறது. இதனால் மதிய வேளையில் வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சில மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகள் என 26 மாவட்டங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட 4 முதல் 6 டிகிரி வரை அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் அதிகப்படியான அனல் காற்று வீசக்கூடும் என்பதால் பொது மக்கள் மற்றும் தேர்தல் வேட்பாளர்கள் மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியே வருவதை தவிர்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .



 

 

சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , வேலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் , இயல்பை விடவும் 10 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் உயரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இதற்கு மதுரையும் விதிவிலக்காக இல்லாத நிலையில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது . இந்நிலையில் அனல் காற்று வீசிய மதுரையில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது .

கோரிப்பாளையம் , தெற்கு வாசல் , பெரியார் , காளவாசல் , புதூர் , சிம்மக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் இடைவிடாது மழை பொழிந்தது . கனமழையால் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது .

Post a Comment

Previous Post Next Post