Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

   ஆசிரியர்கள், ஓட்டுச் சாவடியில் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் 'சஸ்பெண்ட்' - தேர்தல் ஆணையம்.

 தமிழகம் முழுதும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓட்டுச் சாவடி பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், நாளை காலை 10:00 மணிக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி குறிப்பிடும் இடத்தில் ஆஜராக வேண்டும்.



 

 தேர்தல் துறை உத்தரவுப்படி, அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச் சாவடிகளில், நாளை மதியம் 12:00 மணிக்குள் பொறுப்புகளை ஏற்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் பணியின்போது, எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படக் கூடாது. 'ஜாக்டோ - ஜியோ' போன்ற கூட்டமைப்புகளின் செயல்பாடுகளை மனதில் வைத்து, ஓட்டுச்சாவடியில் தேர்தல் பணிகளில் பாரபட்சம் காட்டக் கூடாது.



இது குறித்து புகார் வந்தால், துறை ரீதியாக, 'சஸ்பெண்ட்' போன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஓட்டுச் சாவடி அலுவலர்கள், நாளை மறுநாள் அதிகாலையில், மின்னணு ஓட்டு இயந்திரத்தில், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி, பெட்டியின் இயக்கத்தை சோதித்து கொள்ள வேண்டும். மின்னணு இயந்திரம் கோளாறு இன்றி செயல்படுகிறதா என்பதை, முதலிலேயே சோதனை செய்து கொள்ளவும், ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டு உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post