Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தொலைதூரக் கல்வியில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்பில் சேர பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் வாயிலாக எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்படுகின்றன. பொது மேலாண்மை, தொழில்நுட்பம் மேலாண்மை, விற்பனை மேலாண்மை, மனிதவள மேலாண்மை, நிதி சேவை மேலாண்மை உட்பட 8 பாடப்பிரிவுகளில் வழங்கப்படும். 

எம்பிஏ படிப்பில் நடப்பாண்டில் சேர ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 'டான்செட்' அல்லது தொலைதூரக் கல்வி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்சிஏ படிப்புக்கு பிசிஏ பட்டதாரிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் அவசியம்.  



Although read this news also:

NIFT எழுத்துத் தேர்வுக்கான நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.



இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் 45 சதவீத மதிப்பெண் போதும். மேலே குறிப்பிட்ட நுழைவுத் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும். எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர பிளஸ் 2 அல்லது பட்டப் படிப்பில் கணிதத்தை ஒரு பாடமாக படித்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு நுழைவுத் தேர்வு ஏதும் கிடையாது.


ஆன்லைன் விண்ணப்பம்

மாணவர்கள் ஆன்லைன் (http://cde.annauniv.edu) வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புக்கு ஏப்ரல் 15-ம் தேதிக்குள்ளும், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு ஏப்ரல் 21-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். 
 
எம்பிஏ,எம்சிஏ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் 18-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். கலந்தாய்வு ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறும். சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களில் கல்வி மையங்கள் செயல்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post