ஊழியர்களின் சம்பளம் குறையவில்லை!!
புதிய ஊதிய விதி காரணமாக ஏப்ரல் மாதத்தில் டேக் ஹோம் சம்பளம் ஊழியர்களுக்கு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் புதிய முடிவு எடுக்கப்படும் வரை பழைய நிலையே தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய ஊதிய விதியில், ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் சலுகைகள் 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அடிப்படை சம்பளத்துடன் சிடிசி (CTC) மேலும் அதிகரிக்கும்.
பல நிறுவனங்களும் அடிப்படை சம்பளத்தினை மிகக் குறைவாக கொடுத்து, மற்ற அலவன்சுகளை அதிகமாக கொடுத்து வருகின்றன. இனி அதெல்லாம் குறையும். மாறாக உங்களது அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்
சம்பளத்தில் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும் . ஆனால் புதிய விதிகளின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் . அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது , பிஎஃப் தொகை செலுத்துவதும் அதிகரிக்கும் .
இந்த நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை பழைய முறையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment