பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்தா ??
ஆண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. அதன் பின்பு 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புக்கு மட்டுமே ஜனவரி முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட கொரோனா தொற்று பரவலின் காரணமாக பிளஸ்-2 தவிர, மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Although read this news also :
மேலும் பிளஸ் 2 வுக்கு மட்டும், மே 3 முதல் பொதுத் தேர்வு துவங்க உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிளஸ் 2-வுக்கு ஆல் பாஸ் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அறிவித்தார். இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆல் பாஸ் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வி துறை அதிகாரிகள், மாணவர்கள் பள்ளிக் கல்வியில் இருந்து உயர்கல்விக்கு செல்ல பிளஸ் 2 பொதுத்தேர்வு மிக முக்கியம்.
அந்த தேர்வில் ஆல் பாஸ் வழங்குவது சாத்தியமில்லை. பிளஸ் 2வில் பொதுத்தேர்வு நடத்தாவிட்டால் உயர்கல்வி நிறுவனங்கள் தமிழக மாணவர்கள் இன்ஜினியரிங், மருத்துவம், கட்டடவியல், சட்டம் என எந்த படிப்பிலும் சேர்த்துக் கொள்ளாது. எனவே பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கான, எதிர்கால தேவை அடிப்படையில் அனைவருக்கும் பொதுத் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்குவது கட்டாயம் என்று அவர்கள் கூறினர்.
Post a Comment