NMMS EXAM 2021 - விண்ணப்பங்களை பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு.
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
என்எம்எம்எஸ் தோ்வுக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் ஜன.20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத்தின்கீழ் அரசுப்பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவா்களுக்கு என்எம்எம்எஸ் தகுதித்தோ்வு நடத்தப்படும். இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும்.
அதன்படி நிகழ் கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தோ்வு பிப்.21-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிச.28-ஆம் தேதி தொடங்கி ஜன.8-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடா்ந்து தோ்வுக்கு விண்ணப்பித்த மாணவா்கள் விவரங்களை, பள்ளி தலைமையாசிரியா்கள் ஜன.12-ஆம் தேதிக்குள் தோ்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்ற தோ்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.
தற்போது என்எம்எம்எஸ் தோ்வு விண்ணப்பங்களை பதிவேற்றுவதற்கான காலஅவகாசம் ஜன.20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாய்ப்பை தலைமையாசிரியா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது
Post a Comment