Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 2020-2021 ஆம் கல்வியாண்டு பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Secondary| & Elementary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் - நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல்கள்

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்.

ஒருங்கிணைந்த கல்வி , விழுப்புரம் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் திருமதி.கோ.கிருஷ்ணப்பிரியா , B.Sc. , M.A.B.Ed . , ந.க.எண் . 577 / S & S / ஒக / 2020 

நாள் : 18.12.2020 . 

பொருள் : ஒருங்கிணைந்த கல்வி - விழுப்புரம் மாவட்டம் 2020-2021 ஆம் கல்வியாண்டு பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ( Secondary Elementary ) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் - நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு . 


பார்வை : மாநிலத்திட்ட இயக்குநர் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , சென்னை -6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் .539 / C6 / SS / 2020 , 


நாள் : 12.11.2020 . & பார்வையில் காணும் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி , 2020-2021 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக , “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு " ( Safety & Security at School Level ) என்ற தலைப்பில் பள்ளி ஒன்றுக்கு ரூ .500 / - வீதம் திட்ட ஏற்பளிப்புக் குழுவால் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது .


 இதன் உயரிய நோக்கம் , உலக அளவில் கோவிட் - 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான தற்போதைய சூழலில் , பள்ளி மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிபடுத்துவதும் , தன்சுத்தத்துடனும் , பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலை பள்ளிகளில் ஏற்படுத்துவதும் ஆகும் . எனவே பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக , பள்ளி ஒன்றுக்கு ரூ .500 / - வீதம் அனைத்து வட்டார வளமையங்களுக்கு 1758 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்காக இணைப்பில் காணும் அட்டவணைப்படி நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது . 

வழிகாட்டுதல்கள் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டியவை : 1. மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து நிதி விடுவிக்கப்பட்டவுடன் சார்ந்த பள்ளிகள் திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நிதியை விடுவித்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும் .











Post a Comment

Previous Post Next Post