Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

அரசு கல்லூரி மாணவர்களுக்கு  மாநகர போக்குவரத்துக் கழகம் புதிய  உத்தரவு  !!


 அரசு கல்லூரி மாணவர்கள் பழைய பயண அட்டை மூலம் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் 

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் கிளை மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 

அதன் அடிப்படையில் ''அரசு கல்லூரி, அரசு தொழில்நுட்ப கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கும், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் இந்தகல்வி ஆண்டுக்கான புதிய இலவச பயண அட்டையை'' அச்சடித்து, லேமினே‌ஷன் செய்துவழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாணவர்கள்இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.


முதலாம் ஆண்டு அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் தாம் பயின்று வரும் கல்லூரிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தியும். ''அரசு கல்லூரி, அரசு தொழிற் நுட்ப கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள் 2019-20-ம் ஆண்டு பெற்ற இலவச பயண அட்டையை பயன்படுத்தியும் இலவசமாக கல்லூரி வரை பயணம் செய்ய ஜனவரி மாதம் வரை அனுமதிக்கலாம்''.

எனவே இது குறித்து கிளை மேலாளர்கள் பணிமனை நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு உரிய வகையில் அறிவுறுத்த வேண்டும். கல்லூரி மாணவர்கள் தற்போதைய பயண அட்டையை காண்பித்தால் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post