கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளுக்கு கல்வி தொகை வழங்கப்பட்டது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற கல்வி செலவு தொகையை குறைத்தது தொடர்பாக விளக்கம் அளிக்கவும்.மூன்று ஆண்டுகளுக்கான தொகையை 6 வாரங்களில் வழங்க அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் முனுசாமி அறிக்கை தாக்கல் செய்தார்.
அரசு பள்ளியில் பையிலும் ஒரு மாணவருக்கு செலவாகும் தொகை அல்லது கல்வி கட்டண நிர்ணயக் குழு தனியார் பள்ளிகளுக்கு கட்டணமாக நிர்ணயிக்கும் தொகை, இவற்றில் எது குறைவோ அதனை அடிப்படையாகக் கொண்டே கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் நிதி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் RTE - யில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கவேண்டிய 303.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாகவும், தமிழக அரசு இந்த ஆண்டிற்கான அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆகும் செலவை பொருத்தே அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் கோரியுள்ள கட்டணத்தை விகிதங்கள் சரிபார்க்கப்படும் ஆகையால் RTE தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழைமாணவர்களுக்கு அதற்கான உரிய தொகையை அரசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்துள்ளார்
Post a Comment