விரைவில் 80,000 ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் - ஸ்டாலின் அறிவிப்பு
திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் விரைவில் 80,000 ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார்.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏறத்தாழ 80 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியின்றி தவித்து வருகிறார்கள் . அவர்களின் தகுதித்தேர்வு சான்றிதழ் காலாவதியாகும் நிலையில் அதனை ஆயுட்கால சான்றிதல் ஆக அறிவித்து பணி வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.
இந்தக் கோரிக்கை நீண்டகாலமாகவே நிறைவேற்றப்படாததால், அதனை நிறைவேற்ற வலியுறுத்தி, ' நீட் - ஐ எதிர்த்து பணி விலகிய ஆசிரியர் சபரிமாலா தலைமையில் போராடுகிறார்கள் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் முகநூல் பக்கத்தில் கூறி இருந்துள்ளார்.
Post a Comment