தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மாநில அமைப்பு, கூட்டணி அலுவலகம் : 41 , முக்தாருன்னிசா பேகம் தெரு , எல்லீஸ் சாலை , சென்னை - 600 002
TAMIL NADU PRIMARY SCHOOL TEACHERS ' FEDERATION Office : 41 , Muktharunnisha Begum Street , Elis Road , Chennai - 600 002 , Ph : 044-48581553 www.tript.org E - mail : tamilnadu.trpt@yahoo.con inptſthal@gmail.com
பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 07/2020 நாள் : 16.09.2020
பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே ! வணக்கம் . தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அங்கம் வகிக்கும் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் ( STFI ) சார்பில் 18.09.2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தேசிய கல்விக் கொள்கை - 2020 தொடர்பான மிகச் சிறப்பானதொரு இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது . கருத்தரங்கில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் . C.N. பார்தி அவர்கள் தொடக்கவுரை ஆற்றுகிறார் . சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி நீதியரசர் . அரிபரந்தாமன் அவர்கள் கருத்தரங்க உரை நிகழ்த்துகிறார் . இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அனைத்து இணைப்புச் சங்கங்களின் தலைவர்கள் கருத்துரை ஆற்றுகின்றனர் .
இக்கருத்தரங்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது . தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் பெருமளவில் இதில் பங்கேற்க வேண்டும் . மாநில , மாவட்ட , வட்டார , நகரக் கிளைகளின் பொறுப்பாளர்கள் எக்காரணம் கொண்டும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் . STFI கருத்தரங்கத்திற்கும் நமக்கும் என்ன தொடர்பு ? என்று யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம் . இக்கருத்தரங்கம் நாம் நடத்துகிற கருத்தரங்கம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் . தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒவ்வொரு வட்டார , நகரக் கிளைகளிலிருந்தும் குறைந்தது 20 பேராவது இக்கருத்தரங்கில் இணைந்திட வேண்டும் . அதிகபட்சமாக எவ்வளவு பேர் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் .
இக்கருத்தரங்கில் இணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உடனடியாக மாவட்ட , வட்டார , நகரக் கிளைகளின் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நம் இயக்க whatsapp குழுக்கள் அனைத்திலும் உடனடியாகச் செய்திகளைப் பகிருங்கள் . whatsapp குழுக்களில் செய்திகளைப் பகிர்வதோடு நின்றுவிடாமல் இயக்க உறுப்பினர்களோடு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் கருத்தரங்கில் இணைவதை உறுதிப்படுத்துங்கள் . தங்கள் கிளையிலிருந்து கருத்தரங்கில் இணையவுள்ள ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியலைத் தயார் செய்யுங்கள் . பெயர்ப்பட்டியலை மாவட்டச் செயலாளர்களுக்குத் தவறாது அனுப்புங்கள் .
மாவட்டச் செயலாளர்கள் உடனடியாக வட்டார , நகரக் கிளைகளோடு தொடர்புகொண்டு இப்பணியைத் துரிதப்படுத்துங்கள் . ஒவ்வொரு கிளையிலிருந்தும் கருத்தரங்கில் இணைப்பவர்களின் பெயர்ப்பட்டியலைப் பெற்று மாவட்ட அளவில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துங்கள் . 07.09.2020 அன்று நம் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கில் மாவட்ட வாரியாகக் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை விவரங்கள் மாநில மையத்தில் உள்ளது . அந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதையும் மாவட்ட , வட்டார , நகரக் கிளைப் பொறுப்பாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன் .
எனவே , 07.09.2020 கருத்தரங்கில் பங்கேற்ற நம் இயக்க உறுப்பினர்களை விட அதிக எண்ணிக்கையில் 18.09.2020 கருத்தரங்கில் நம் இயக்க உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டிய அவசியம் உள்ளது . 18.09.2020 STFI இணையவழிக் கருத்தரங்கிலும் நம் இயக்கத்தின் சார்பில் மாவட்ட வாரியாகப் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை நாம் கணக்கிட வேண்டியுள்ளது . ஒட்டுமொத்தமாக நம் இயக்கத்தின் சார்பில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதையும் கணிக்கிட வேண்டியுள்ளது . எனவே , நம் இயக்கத்தின் சார்பில் கருத்தரங்கில் பங்கேற்கும் தோழர்களை அவர்களது பெயருடன் , TNPTF மற்றும் மாவட்டத்தின் பெயரையும் சேர்த்துப் பதிவிடக் கூறவும் . ( 2 - ம் ) Murugesan , TNPTF , Tirunelveli .
கருத்தரங்கில் இணையும் நம் இயக்க உறுப்பினர்கள் அனைவரையும் Zoom App link வழியாகவே இணைந்திடக் கூறுங்கள் . அதுவே மிகவும் எளிது என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள் . கடந்த காலங்களில் 5 , 6 மணி நேரம் பயணம் செய்து ஒரு நாள் முழுவதும் செலவழித்து கருத்தரங்கங்களில் பங்கேற்றுள்ளோம் . ஆனால் , இன்றைய பொது முடக்கச் சூழலில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைபெறும் இக்கருத்தரங்கில் இணைந்து வீட்டிலிருந்தபடியே 2 மணி நேரத்தை மட்டும் செலவழிப்பது என்பது மிகவும் எளிதானது . நாம் இயக்க நிகழ்வுக்காக நம் இயக்க உறுப்பினர்கள் ஒரு 2 மணி நேரம் மட்டும் செலவழிப்பதை உறுதிப்படுத்துங்கள் .
07.09.2020 மற்றும் 18.09.2020 ஆகிய இணையவழிக் கருத்தரங்கங்கள் தொடர்பாக விரைவில் நடைபெறவுள்ள நம் பேரியக்கத்தின் நேரடி மாநிலச் செயற்குழுவில் விரிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது . எனவே , மாவட்ட , வட்டார , நகரக் கிளைகளின் பொறுப்பாளர்கள் 18.09.2020 கருத்தரங்கில் தங்கள் கிளை உறுப்பினர்களின் அதிகபட்சமான பங்கேற்பை உறுதிப்படுத்துமாறு மாநில மையம் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது .
Post a Comment