இனி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் தனித்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி காரைக்காலில் ஜிப்மர் மருத்துவ கல்லூரிகள் இயங்கி வருகிறது அதில் மருத்துவக் கல்வி பயில ஜிம்மர் நிர்வாகம் தனியாக நுழைவுத் தேர்வை நடத்தி அதன்மூலம் மாணவர்கள் சேர்க்கையை நடத்தி வந்தது.
ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்தது.
எனவே நிகழ் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்புக்கு தனித்தேர்வு கலந்தாய்வு ஜிப்மர் சார்பில் நடத்தப்படாது மாணவர்கள் கூடுதல் விவரங்களை என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என ஜிப்மர் மருத்துவ நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் தனித்தேர்வு இன்றி ஜிப்மர் கல்லூரியில் நீட் தேர்வு மதிப்பெண் வைத்தே மருத்துவ கல்வியை பயிலலாம்.
Post a Comment