Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
மாணவர்களுக்கு  டவுட் ஏற்பட்டால்  பள்ளிகளுக்கு வரலாம் - செங்கோட்டையன் பேட்டி
 

அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கூடம் திறப்பது குறித்து இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று ஈரோடு மாவட்டம் கோபி அருகே நிருபர்களிடம் கூறியுள்ளார்

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.‌  அதன் அடிப்படையில்தான் அக்டோபர் 1ஆம் தேதி பள்ளிக்கூடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . 

மாணவர்கள் தங்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக பெற்றோர் சம்மதகடிதத்துடன் தான் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும் என வருவாய்த்துறை மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இதுகுறித்து பெற்றோர்கள் , கல்வியாளர்கள், அனைத்து துறை அதிகாரிகளுடன் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. 

மாணவர்களின்சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக மட்டுமே அக்டோபர் 1ஆம் தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது . விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்குச் செல்லலாம் .

எந்தவித கட்டாயத்தின் படி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டாம் , பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கட்டாயமாக பெற்றோரின் சம்மத கடிதத்துடன் தான் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்று அவர் பேட்டி அளித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post