ஆசிரியர்கள்/அரசு ஊழியர்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட தொழில் வரி விவரம்
தொழில் வரி - திண்டுக்கல் மாவட்டம் 2019-2020 - ஆம் ஆண்டிற்கு
இரண்டாம் அரையாண்டிற்கான தொழில்வரியை பணியாளர்களின் பிப்ரவரி 2020 - ஆம்
மாத ஊதியத்தில் பிடித்தம் செய்வது - தொடர்பாக .
பார்வை
: 1994 - ஆம் வருடத்திய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 198 A மற்றும்
B. பார்வையில் கண்டுள்ள தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 198 - B
உட்பிரிவு 13 ( 2 ) -ன் படி குறித்துரைக்கப்பட்ட வரி வீதமானது ஊராட்சி
மன்றத்தால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்படுதல் வேண்டும் .
அவ்வாறு திருத்தியமைக்கின்ற தேதிக்கு அடுத்து முன்பு
விதிக்கப்பட்டிருந்தவாறான வரியில் நூற்றுக்கு இருபத்தைந்து
விழுக்காட்டிற்குக் குறைவாகவோ , நூற்றுக்கு முப்பத்தைந்து விழுக்காட்டிற்கு
அதிகமாகவோ இல்லாமல் வரியானது உயர்த்தப்படுதல் வேண்டும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனவே இதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் ,
ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் உள்ள அரசு அலுவலர்கள் . வங்கி ஊழியர்கள்
மற்றும் அரசு / தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவன
ஊழியர்களுக்கு 2019-20 - ஆம் இரண்டாம் அரையாண்டிற்கு கீழ்கண்ட திருத்திய
விவரப்படி தொழில்வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும் . தொழில்வரி பிடித்தம்
செய்யப்பட வேண்டி வருமானம் ( ஊதியம் மற்றும் அனைத்துப் படிகளும் ) விபரம்
ஆறு மாத வருமானம் பிடித்தம் செய்ய வேண்டிய தொழில் வரி :
1) ரூ .21000 / -வரை வரி இல்லை
2) ரூ .21001 முதல் 30000 வரை ரூ .150 /
3) ரூ .30001 முதல் 45000 வரை ரூ .375 /
4) ரூ .45001 முதல் 60000 வரை ரூ .735 /
5) ரூ .60001 முதல் 75000 வரை ரூ .1100 /
6) ரூ .75001 - க்கு மேல் ரூ .1250 /
1.
மேற்கண்டவாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து ஊதிய விபரப்பட்டியல்
பெற்று , தொழில்வரி நிர்ணயம் செய்து பிப்ரவரி 2020 - ஆம் ஊதியத்தில் வசூல்
செய்யப்பட வேண்டும் .
2.வசூல் செய்யப்பட்ட தொகைகள்
அடுத்த நாளே சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்கில் இருசால் செய்யப்பட வேண்டும் .
மேலும் , அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் இப்பொருள் தொடர்பாக
சுற்றிக்கை சார்பு செய்து ஒப்புதல் பெற அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் (
கி.ஊ ) - கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
Post a Comment