கொரோனா அச்சம் நீங்கிய பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.
கொரோனா அச்சம் முழுமையாக நீங்கிய பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது இதுகுறித்து அச்சங்கத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர் திரு ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது
நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு அண்மையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஒரு புறமும் மறுபுறம் இருந்து வருகிறது இந்நிலையில் இரண்டாவது அடுத்த மாதம் தாக்கக் கூடும் என்றும் அதனால் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் அரசு தொடர்ந்து எச்சரித்து வருகிறது
மத்திய அரசு ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திறக்கலாம் என்று அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசு இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வரும் சூழலில் கல்வியைவிட மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம்
எனவே தற்போதைய சூழலில் பள்ளிகள் திறந்தால் கூட, மாணவர்களின் பாதுகாப்பு கருதி 5 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் தினமும் சூழ்ச்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முகக்கவசம் கையுறை சனிடைசர் உள்ளிட்டவைகளை வழங்கி அவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் கொரோனா அச்சம் இன்னும் மக்களை விட்டு நீங்காத நிலையில் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா முழுமையாக நீங்கிய பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது..
இதில் குர் ஆன் அச்சம் விளக்கம் தருக
ReplyDeleteMore no of spelling mistakes
ReplyDeletePost a Comment