பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இன்று நிறைவு
இந்த ஆண்டு மாணவர்கள் புதிய சேர்க்கை என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2020-21 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,மாணவர்கள் சேர்க்கை என்பது இதுவரை 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் அதிகபட்சமாக மாணவர்கள் சேர்க்கை உள்ள வகுப்புகள் 1-ம் வகுப்பில் 3 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்களும், 6-ம் வகுப்பில் 3 லட்சத்து 66 ஆயிரம் மாணவர்களும், 9-ம் வகுப்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்களும், 11-ம் வகுப்பில் 4 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களும் புதிதாக சேர்ந்துள்ளனர்.
பள்ளிகளில் மாணவர்கள் புதிய சேர்க்கை என்பது இன்று மாலையுடன் நிறைவடைவதாக, இதுவரை தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள்,இன்றைக்குள் பள்ளியில் குழந்தைகளை சேர்க்கை உறுதி செய்யுமாறு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Post a Comment