அரசு சிறப்பு ஊக்கத்தொகை பெறும் மாணவர்களின் விடுபட்ட பெயர்கள் சமர்ப்பிக்க உத்தரவு
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் (சுயநிதி பாடப்பிரிவு தவிர்த்து) 2019-20 கல்வியாண்டில், பிளஸ் 2 வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு,சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் படி, மாணவர்களின் விபரங்கள் மற்றும் வங்கி சேமிப்புக் கணக்கு விவரங்களை கல்வியியல் மேலாண்மைத் தகவல் அமைப்பின் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இன்னும் மேலும் சில தகவல்கள் அறிவிக்கப்படவில்லை.
ஆகையால், அவற்றை மீண்டும் பதிவு செய்து அனுப்ப, தலைமையாசிரியர் தெரிவிக்க வேண்டும். இதையடுத்து மாணவர்களின் விவரங்களை அனைத்தையும் முதன்மை கல்வி அலுவலர்கள் சரி பார்த்து அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Post a Comment