Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
கடிதம் எழுதும் நாள்

கடிதம் எழுதும் நாள் குறித்து திருச்சி அஞ்சல் தலை சேகரிப்பாளரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் கூறுகையில்,

அன்புள்ள அப்பா,அம்மா, தாத்தா, பாட்டி, மனைவி, காதலி,குழந்தைகள் உட்பட பல்வேறு பயன்பாட்டுகள் வரை அனைத்தையும் ஒரு அஞ்சல் கடிதத்தில் உற்றார், உறவினர், சுற்றத்தார் ,நண்பர்கள் என அனைவருக்கும் எழுதிய அனுபவம் உண்டு.  கடிதம் எழுதும் போது சிந்திப்பதும் உணர்வுகளை எழுத்தால்  எழுதப்பட்ட வார்த்தையின் அதிசயங்களை இன்றளவும் அசைபோட கூடியதாகத்தான் இருக்கிறது.அப்படி எழுதிய கடிதம் அஞ்சல் பெட்டியில் போடப்பட்டு முத்திரையிடப்பட்டு பெறுநர் கிடைக்கும்போது அக்கடிதத்தின் அனுபவமே அலாதியானது தான்.கடிதம் எழுதுவது என்பது பழைய தகவல் தொடர்பாக இருக்கலாம். 



ஆனால், கடிதத்தை அவரவர் உணர்வை தாங்கி தாங்கிவரும் பொக்கிஷமாகும்.தாய்மொழியில் எழுத்தால் எழுதும் பொழுது சுக, துக்கங்களையும் வரவு, செலவுகளையும் பள்ளி, கல்லூரி தேர்வு முடிவுகளையும் அறிய முடிந்தது. காதலர்கள் காதலிக்கு எழுதியக் கடிதம் வரும் பொழுது இருக்கக்கூடிய திக் திக் அனுபவம் பல நேரங்களில் அனுபவிக்க கூடியதாகவே இருக்கும். கடிதம் எழுதுவது சிந்திக்கக்கூடிய ஆற்றலையும் எழுதக் கூடிய ஆற்றலையும் கொடுக்கக் கூடியது. 

 நவீன தொழில்நுட்ப இணைப்பு வடிவங்கள்  ஒருவருடன் தொடர்புகொள்வதற்கு முன்பு பிரதிபலிக்கவும் சிந்திக்கவும் முனைவதில்லை. இருப்பினும், இதைச் செய்வதற்கான சரியான வாய்ப்பை ஒரு கடிதம்  வழங்கியது.இன்றைய தலைமுறையினர் கடிதம் எழுதும் கலையை அறிந்திருக்க வாய்ப்பில்லை.நொடிக்கு நொடி உலக விஷயங்களில் உள்ளங்கையில் பெரும் வசதி இருந்தாலும் இன்றைய தலைமுறையினர் ஒரு பக்க கடிதம் எழுதுவது என அறிந்திருப்பது அவசியம் . பல்வேறு கடிதங்களை இன்றளவும் பொக்கிஷமாக சேகரித்து வருகிறேன் என்றார்.

Post a Comment

Previous Post Next Post