கருவூலம் மற்றும் கணக்குத் துறை
அனுப்புநர் :
கருவூலக் கணக்கு ஆணையர் ,
அம்மா வளாகம் , 3 வது தளம் ,
கால்நடை மருத்துவமனை வளாகம் ,
எண் . 571 , அண்ணா சாலை , நந்தனம் ,
சென்னை- 35
பெறுநர் :
சம்பளக் கணக்கு அலுவலர்
( தெற்கு கிழக்கு வடக்கு மற்றும் மதுரை)
2 ) அனைத்து மண்டல இயக்குநர்கள்
3 ) சார் சம்பளக் கணக்கு அலுவலகம்
. ( மாநகராட்சி சென்னை 3 )
நகஎண் 25986/12/2020 , நாள் , 24.09.2020 ,
அய்யா அம்மையீர் ,
பொருள் : முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட மனு ஆசிரியர்களின் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுத்தொகை 31.03.2020 க்குப் பிறகு அனுமதிக்கப்பட்டு அனைத்து கருவூலம் வழியாக பெறப்பட்ட மொத்தத் தொகை - தொடர்பாக
பார்வை : முதலமைச்சரின் தனிப்பிரிவில் கீழ் பெறப்பட்ட மனு ,
பார்வையில் காணும் கடிதத்தில் தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் ஆசிரியர்களின் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுப்பட்டியல் 31.03.2020 - க்குப்பிறகு அனுமதிக்கப்பட்டு ஆசிரியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தத் தொகை கோரப்பட்டுள்ளது . எனவே . இப்பொருள் தொடர்பாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலங்களில் ஆசிரியர்களின் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுப்பட்டியல் 31.03.2020 -க்கு பின்னர் அனுமதிக்கப்பட்டிருப்பின் மேற்படி ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தத் தொகையினை உடனடியாக அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது . இப்பொருள் குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அறிக்கை அனுப்ப வேண்டியுள்ளதால் தங்களின் அறிக்கையை விரைந்து கேட்டுக்கொள்ளப்படுகிறது .
எல்.இராஜ கோபாலன்
நேர்முக உதவியாளர் ( கருவூல கட்டுப்பாடு )
கருவூல கணக்கு ஆணையரகம்
Post a Comment