இன்று செப்டம்பர் 28 பள்ளிகளை திறப்பது குறித்து தலைமை ஆசிரியரிடம் ஆலோசனை
மத்திய அரசு செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறந்து, 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்பு நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல மாநிலங்களில் வகுப்புகள் துவங்கியுள்ளன.
தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகளைத் திறந்து, பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசு வாரத்தில் ஆறு நாட்களுக்கு பள்ளிகள் இயங்கும் என்றும் மேலும், 50 சதவீதம் ஆசிரியர்கள் தினமும் பணிக்கு வரவேண்டும் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக, அனைத்து மாவட்டங்களிலும், தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு அறிக்கையை தயாரிக்க முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தியிருந்தனர். அதில் வரும் 5-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என்று பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் , தமிழக அரசு பள்ளிகளை திறப்பது குறித்து மாணவர்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளன. மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் முக கவசம் அணிய வேண்டும், பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பல வழிமுறைகளை முன் வைத்துதான் பள்ளிகளை தமிழக அரசு திறக்க முன் வந்தது.
Post a Comment