Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

2nd Standard Term1 Tamil | Sollathe Sollathe Tamil Rhymes | சொல்லாதே சொல்லாதே பாடல் 

 இரண்டாம் வகுப்பு -  முதல் பருவம்
 தமிழ் பாடம் - தொகுதி-1 

பாடம் 2 :  சொல்லாதே ! சொல்லாதே !

சொல்லாதே சொல்லாதே !


நீல வானம் தூரமென்று 
பறவையிடம் சொல்லாதே
 பறவையிடம் சொல்லாதே 
அடர்ந்த காடு இருண்ட தென்று
கரடியிடம் சொல்லாதே 
கரடியிடம் சொல்லாதே

 பெரிய கடல் ஆழமென்று 
மீன்களிடம் சொல்லாதே 
மீன்களிடம் சொல்லாதே

 கற்பதெதுவும் கடினம் என்று
 எங்களிடம் சொல்லாதே 
எங்களிடம் சொல்லாதே


********************************


சொல்லாதே சொல்லாதே !

நீல வானம் தூரமென்று 
பறவையிடம் சொல்லாதே
 பறவையிடம் சொல்லாதே 
அடர்ந்த காடு இருண்ட தென்று
கரடியிடம் சொல்லாதே 
கரடியிடம் சொல்லாதே

 பெரிய கடல் ஆழமென்று 
மீன்களிடம் சொல்லாதே 
மீன்களிடம் சொல்லாதே

 கற்பதெதுவும் கடினம் என்று
 எங்களிடம் சொல்லாதே 
எங்களிடம் சொல்லாதே


பயிற்சி பகுதி : 

 சொல்லிப் பழகு 
தூரமென்று, ஆழமென்று, இருண்டதென்று, கடினமென்று, கற்பதெதுவும், பறவையிடம், கரடியிடம், மீன்களிடம், எங்களிடம்...



 படித்தும் எழுதியும் பழகு :

 பறவை, கரடி, மீன்கள், இருட்டு, ஆழம், கடினம், தூரம், நீலவானம், அடர்ந்த காடு, பெரிய கடல்,


பொருத்துக : 
 யாருக்கு எது கடினமில்லை 


 பறவை  - வானத்தின் தொலைவு
 கரடி -  காட்டில் இருட்டு
மீன் - கடலின் ஆழம்
குழந்தைகள் - கற்றுக் கொள்ளுதல்

     


Post a Comment

Previous Post Next Post